
Chennai , 24th March 2025: உலகளவில் ஒரு முதன்மை நிகழ்வான நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் (ICONN-2025) மீதான 8வது சர்வதேச மாநாடு (ICONN-2025), காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (SRMIST) அதன் இயற்பியல் மற்றும் நானோதொழில்நுட்பத் துறையால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத் துறையில் புதிய, புரட்சிகர முன்னேற்றங்கள் பற்றி விவாதிப்பதற்காக நடைபெற்ற இம்மாநாட்டு நிகழ்வில், உலகளவிலான முன்னணி ஆராய்ச்சியாளர்கள் தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் பற்கேற்றனர்.
இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), WILEY, ஸ்பிரிங்கர் நேச்சர் யுஎஸ்ஏ, மால்வெர்ன் பனாலிட்டிக்கல் ஸ்பெக்ட்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட், நெதர்லாந்து ஆகிய நிறுவனங்கள் இணை ஸ்பான்சராக பங்கேற்ற நிலையில், ஜப்பானின் ஷிசுவோகா பல்கலைக்கழகத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்; நேஷனல் யாங் மிங் சியாவோ பல்கலைக்கழகம், மலாயாவின் தைவான் பல்கலைக்கழகம், மலேசியா; ரிகாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், லாட்வியா; ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா; தாஸ்மேனியா பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா; மொர்டோவியா மாநில பல்கலைக்கழகம், ரஷ்யா; நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (NRC), SRMIST ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
குறைக்கப்பட்ட பரிமாண அளவுகோலில் பொருட்கள், நானோஃபேப்ரிகேஷன், நானோ மின்னணுவியல், ஆற்றல் பயன்பாடுகள் மற்றும் உருவாகி வளர்ந்து வரும் நானோ மருத்துவ தொழில்நுட்பங்கள் ஆகிய தலைப்புகளில் சிறப்பு பேச்சாளர்களின் சிறப்புரைகள், தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் நிபுணர் குழுவின் விவாதங்கள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்வுகள் இம்மாநாட்டில் இடம்பெற்றன. ஆற்றல் சேகரிப்பு, நானோகாம்போசிட்டுகள், வினையூக்கிகள், இரு பரிமாண பொருட்கள் ஆகியவை மீது புரட்சிகரமான முன்னோடி ஆராய்ச்சிப் பணிகள் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்வில் சமர்ப்பித்தனர்.
அடிப்படையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புத்தாக்கத்தின் வரம்பெல்லைகளை மேலும் நகர்த்துவதாக இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் அவர்களது ஆராய்ச்சி செயல்பாடுகளையும், கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தவும் மற்றும் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் இந்த மாநாட்டு நிகழ்வு அவர்களுக்கு ஒரு சிறப்பான தளத்தை வழங்கியது. நிலைப்புத்தன்மையுள்ள நானோ தொழில்நுட்பம் மற்றும் நிஜ உலக செயல்பாடுகள் மீது வலுவான கூர்நோக்கம் செலுத்துகின்ற ICONN சர்வதேச மாநாடு, பொருட்களின் இயற்பியல், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகிய தளங்களில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்தி வருகிறது,
இந்தியாவின் SRMIST கல்வி நிறுவனத்தின் ICONN – 2025 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் – பேராசிரியர் E. செந்தில்குமார் இம்மாநாட்டு நிகழ்வில் வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, தொடக்க நிகழ்விற்கு தலைமை வகித்த SRMIST – ன் துணை வேந்தர் புரொஃபசர் C. முத்தமிழ்ச்செல்வன், உரையாற்றினார். நானோஅறிவியல் மற்றும் நானோதொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் வளர்ந்து வரும் தரமான ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் குறித்து அவர் வலியுறுத்தினார். ICONN-2025 மாநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்வுகள் குறித்து அவர் குறிப்பிட்டார். ஹைதராபாத்திலுள்ள ARCI – ன் இயக்குனர் டாக்டர். ஆர். விஜய் இந்நிகழ்வில் தொடக்க உரையை வழங்கினார்.
நானோதொழில்நுட்பத் துறையில் கிடைக்கும் சிறப்பான வாய்ப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்; இத்துறையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி சமூகத்தினர், தொழில்நுட்ப மாற்றுகைக்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டுமென்று தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.